இலக்குகள்






உங்கள்
இலக்கும் இலட்சியமும்
பெரியதாக இருந்தால் ....

சின்னச்சின்னத்
தோல்விக‌ள் உங்க‌ளைச்
சோர்வ‌டைய‌ச் செய்யாது !




ந‌ன்றி : தென்ற‌ல்
 
posted by திகழ் at 6:13 AM, | 2 comments

வெற்றி




தோல்வியை
நீங்க‌ள் எப்ப‌டி
எதிர்கொள்கிறீர்கள்
என்பது தான் ....

வெற்றியை
நீங்கள் எப்படி
அடையப் போகிறீர்கள்
என்பதைத்
தீர்மானிக்கிறது !



(நன்றி ; தென்றல்)
 
posted by திகழ் at 5:48 AM, | 2 comments

நம்பிக்கை




சாண் ஏற‌
முழம் சறுக்கினாலும்
சந்தோசப் படு...
சாண் ஏறும் சாகசமேனும்
சரியாய்த் தெரிந்ததற்கு!

சறுக்கலைச் சரி செய்...
சரியாகும் உன் பயணம்!

சாண் ஏறும் உன்னால்
முழம் ஏறும் முடியும்
முழுவதும் ஏறவும் முடியும்!



கவிதை: மலர்விழி இளங்கோவன் அவர்கள்
 
posted by திகழ் at 9:02 PM, | 7 comments

எட்டாத உயரம்





எட்டாத உயரம் என்று ஒன்று
இல்லை இன்று
தொட்டில் கட்டி, தாலாட்டு பாடி
தூங்கவைத்த காலம் போய்
நிலவு சென்று
புட்டி பாலூட்டி பாடம் நடத்தும்
இந்த காலத்தில்
யாரும் எது எட்டாத உயரம்
எட்டாத உயரம் என்பதற்காக
கிரகாம் பொல்
தன் முயற்சியை தொடாமல் விட்டிருந்தால்
நமக்கு இன்று எது தொலைபேசி
ஆம்சுட்ராங் நினைத்திருந்தால்
நிலவை எப்படி தொட்டிருக்கமுடியும்
வெற்றி கொடி நாட்டிருக்கமுடியும்
எட்டாத உயரம் என்பதற்காக
விட்டுவிட்டா வந்துவிட்டான் இந்த மனிதன்
ஆழமானது கடலாம்
நீலமானது வானமாம்
கடலின் ஆழத்தை கண்டறிய
கதிர்களைக் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன்.
வானத்தில் அந்தரங்கம்
அனைத்தும் தெரியும் இந்த மனிதனுக்கு
மண்ணில் வீடு கட்டி போரடித்த மனிதன்
விண்ணில் வீடு கட்ட புறப்பட்ட இந்த நேரத்தில்
யாருக்கு எது எட்டமுடியாத உயரம்
சுட்டெரிக்கும் சூரியனையும் கூட
தொட்டணைக்கும் துடிப்பு மிக்க
இளைஞர்கள் வாழும் இச்சமுதாயத்தில்
யாருக்கு எது எட்டமுடியாத உயரம்


கவிதை; காளிமுத்து பாரத்
 
posted by திகழ் at 7:23 PM, | 2 comments

வாழ்க்கையைக் கற்றுக்கொள்



மாலையில்
மரணம் என்று
தெரிந்திருந்தும் கூட
காலையில்
கண்ணீர் வடிப்பதில்லை
பூக்கள் !!!
அதன் சிரிப்பில்
வாழ்க்கையைக் கற்றுக்கொள்
மனிதா !!!



கவிதை ; இதயா 2020/ராஜேஷ் குமார்
 
posted by திகழ் at 12:50 AM, | 0 comments

நீ சாதிக்கப்பிறந்தவன்



மேற்கில் விழுந்து,பின்
கிழக்கில் புதிதாய் எழும்
சூரியனும்

தேய்ந்து,பின்
வளர்ந்து பிரகாசமாய் ஒளிரும்
நிலாவும்

பூமியாய்
பிளந்தெழும் புல்லும்

இவை என்னை நோக்கி
மெளனமாய் சொல்லும்
இளைஞனே...
எழுந்திரு
நீ சாதிக்கப்பிறந்தவன் என்று



கவிதை ; சரோ
 
posted by திகழ் at 11:34 PM, | 6 comments

குறிக்கோள் அற்ற வாழ்க்கை





குறிக்கோள் அற்ற வாழ்க்கை,
முட்கள் அற்ற கடிகாரம் போன்றது.
அது நின்றாலும்,
ஓடினாலும் பயனில்லை.


நன்றி ; முத்தமிழ் மன்றம்
 
posted by திகழ் at 6:56 PM, | 2 comments

எது தன்னம்பிக்கை




முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை!
முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை!
முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!


நன்றி ; முத்தமிழ் மன்றம்
 
posted by திகழ் at 1:22 AM, | 0 comments

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே



நல்ல விசியங்களைக் கேட்டதும் ,
வாசிப்பது கூட நன்று தான்.









ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!

உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்!
கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!

மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா!
துக்கம் என்ன என் தோழா!
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்!

மனமே! ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ நீ மோதிவிடு!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ? நீ மோதிவிடு!

 
posted by சக்தி at 4:47 PM, | 0 comments